Saturday, December 1, 2012

மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக தங்கத்தில் முதலீடு

வணக்கம் நண்பர்களே,

இதற்க்கு முந்தைய பதிவில், மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய ஒரு அறிமுகத்தை பார்த்தோம். இந்த பதிவில்  மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி,  அதனால் என்ன நன்மைகள் என்று பார்ப்போம்.


தங்கம்:

இன்றைய தினத்தில் தங்கம் என்பது நமது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு இன்றிமையாத இடத்தை பிடித்து விட்டது. தங்கத்தை ஆபரணமாக மட்டுமே பார்த்த காலம் மாறி, முதலீடு செய்யும் இடமாகவும் மாறி விட்டது. 



















தங்கம் வாங்கும் வழி :

பொதுவாக நாம் கீழே உள்ள ஏதாவது ஒரு வழியில் தங்கம் வாங்கிடலாம்.
  • நகை கடைகளில் வாங்குவது 
  • வங்கி / தபால் நிலையங்களில்  வாங்குவது
  • இ -கோல்ட் 

நகை கடைகள் மூலமாக வாங்குவது

நமக்கு தெரிந்த மிக சுலபமான வழி இதுவே. தங்க நகையாக அல்லது தங்க காசுகளாக வாங்கி கொள்ளலாம்.

வங்கி / தபால் நிலையங்களில்  வாங்குவது

இங்கு தங்க காசுகள் மட்டுமே வாங்க முடியும். நகைகள் இங்கே கிடைக்காது மேலும் நமக்கு விற்ற தங்க காசுகளை திரும்ப வாங்கி  கொள்ள மாட்டார்கள்.  

இ -கோல்ட் 

இன்றளவில் இந்தியாவில் பிரபலமாகி கொண்டு வருகின்ற முறை இது. நீங்கள் தங்கம் வாங்க மிக சிறந்த வழிமுறை இது. 

 
முதலில் குறிப்பிட்டு இருந்தது போல தங்கத்தை நாம் நகை கடைகளில் இருந்தே பெரும்பாலும் வாங்குகிறோம். நீங்கள் தங்க நகைகள் (நகைகளாக) வாங்க இதுவே   வழி.

ஆனால் உங்களது நோக்கம் சேமிப்பாகவோ (சிறிது சிறிதாக தங்க காசுகள்  சேர்த்து பின்பு அதைக்கொண்டு நகை  வாங்குவது) அல்லது முதலீடாகவோ (தங்க காசுகள்  வாங்கி பின்பு  விற்று லாபம் பார்ப்பது)  இருக்கும் பட்சத்தில் மூன்றாவதாக கூறிய இ -கோல்ட் முறையே (மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக தங்கத்தில் முதலீடு) சிறப்பானதாகும்.

மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக தங்கத்தில் முதலீடு செய்வதால் என்ன பயன்கள் ?

1.  மாதம் தோறும் ஒரு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு உங்களால் தங்கம் வாங்க முடியும் 

2. உங்களது வங்கி கணக்கிலிருந்து மாதம்தோறும் SIP (Systematic Investment Plan) முறையில் பணம் எடுக்கப்பட்டு, அந்த தொகைக்கான தங்கம் (யூனிட்களாக) உங்களது கணக்கில் வரவு வைக்கப்படும்.  

3.  செய்கூலி மற்றும் சேதாரம் ஆகிய செலவுகள் இதில் இல்லை.

4. மிக குறைந்த கட்டணம்  

5.  மிக குறைந்த தொகைக்கு (100/500/1000) மாதம் தோறும் தங்கம் வாங்க கூடிய வசதி

6.  பாதுகாப்பு பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. (திருட்டு பயம் கிடையாது)

7.  வங்கி லாக்கர் போன்றவை தேவையில்லை (
லாக்கர் வாடகை தொகை மீதியாகும்) 

8.  எப்பொழுது வேண்டுமானாலும் விற்று பணமாக பெற்று கொள்ள கூடிய வசதி 

9.  தங்கம் விலை குறைந்து உள்ள பொழுது கூடுதல் பணம் செலுத்தி அதிக தங்கம் (குறைந்த விலையில்) வாங்கி வைக்கலாம். 

10.  சொத்து வரி கிடையாது (ஒரு வருடத்திற்கு மேல் விற்கும் பொழுது)

11.  டீமாட் அக்கௌன்ட் தேவையில்லை. 

12.  நீண்ட கால தேவைகள்  / குழந்தைகளின் திருமணம் போன்றவற்றிக்கு இப்பொழுது இருந்தே திட்டமிட்டு மாதம்தோறும் முதலீடு செய்யலாம்.


மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக தங்கத்தில் முதலீடு - சிறு உதாரணம்.

ஒரு சிறிய  உதாரணத்தின்  மூலம் மியூச்சுவல் ஃபண்ட் வழியாக செய்யப்படும் முதலீடு எப்படி சிறந்தது என பார்ப்போம்.

 நீங்கள் 8 கிராம் தங்கத்தை 01-02-2012 அன்று வாங்கி 30-11-2012 அன்று விற்பதாக வைத்து கொள்வோம்.

நகை கடையில்  8 கிராம் தங்கம் வாங்கி, அதே கடையில் விற்பனை செய்தால் Rs. 863.63 லாபம் கிடைக்கும்.

அதே தொகைக்கு மியூச்சுவல் ஃபண்ட் வழியாக  வாங்கி, விற்பனை செய்தால் Rs. 2171.11 லாபம் கிடைக்கும். (வாங்கிய தேதியில் இருந்து ஒரு வருடம் கழித்து விற்பதாக வைத்து கொண்டால் Rs. 2416.57 லாபம் கிடைக்கும்).

விரிவான கணக்கீடு: 




குறிப்பு : இங்கே கணக்கீடு செய்ய SBI Gold Fund இன் NAV பயன்படுத்த பட்டுள்ளது. தங்க காசு வாங்கும் பொழுது கணக்கிடப்படும் சேதாரம் 3% என எடுத்து கொண்டுள்ளோம். இது கடைகளை பொறுத்து மாறுபடலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக தங்கத்தில் முதலீடு - யாருக்கு ஏற்றது ?

மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக தங்கத்தில்  முதலீடு   செய்வது அனைவருக்குமே ஏற்றது என கூறலாம். 

குறிப்பாக,


  • மாதம்தோறும் ஒரு தொகை தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர்.
  • நீண்ட கால முதலீடாக தங்கம் வாங்க விரும்புவோர்.
  • குழந்தைகளின் திருமணம் போன்ற நிகழ்சிகளுக்கு இப்பொழுது இருந்தே சேமிக்க விரும்புவோர்.

 என அனைவரும் மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக தங்கத்தில்  முதலீடு  செய்யலாம்.




மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி ?

சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனகளின் தங்க முதலீட்டு திட்டத்தில் பங்கு கொள்ள 9789 44 5 777 என்ற அலைபேசியில் எங்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது snp.personalfinance@gmail.com என்ற முகவரிக்கு உங்களை பற்றிய தகவல்களை அனுப்பவும். 

-- SNP 



Tuesday, September 4, 2012

மியூச்சுவல் ஃபண்ட் - ஒரு அறிமுகம்

வணக்கம் நண்பர்களே,

இதற்க்கு முந்தைய பதிவில், மியூச்சுவல் ஃபண்ட் என்பது குறுகிய மற்றும் நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்றது எனக் கூறியிருந்தோம் அல்லவா ? இந்த பதிவில் மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய ஒரு அறிமுகத்தை பார்ப்போம்.



மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட் என்பது,  முதலீட்டாளர்களிடம்  இருந்து பணத்தை வாங்கி, அதனை பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம் மற்றும் அரசாங்க பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து வரக்கூடிய  லாபத்தை முதலீட்டர்களுக்கு திருப்பி தருவது ஆகும். (சில சமயங்களில் நஷ்டமாகவும்  இருக்கலாம்) 

இதை செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கட்டணமாக எடுத்து கொள்ளப்படும்.

மியூச்சுவல் ஃபண்ட் முறையில் நாம் முதலீடு செய்வது நமக்கு பல வகைகளில் பயனுள்ளதாக இருக்கும்.  (தொடர்ந்து வரும் பதிவுகளை இதைப் பற்றி  விரிவாக பார்ப்போம்).



நாம் ஏன் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் ?

இன்றைய சூழ்நிலையில் விலைவாசி ஏற்றம் என்பது மறுக்க முடியாத ஒரு விசயமாக உள்ளது. (இதை பணவீக்கம் என்று சொல்வார்கள்)

இதை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்வோம். நீங்கள் வாங்க கூடிய ஒரு பொருளின் விலை பத்து ரூபாய் (ஒரு வருடத்தில்) அதிகரிக்கிறது. ஆனால் அதே வேளையில் அந்த பணத்தின் மதிப்பு எட்டு ரூபாய் மட்டுமே (ஒரு வருடத்தில்) அதிகரிக்கிறது எனில்,  நாம் பணவீக்கத்தினால் பாதிக்கப்படுகிறோம்.



பணவீக்கத்தை சமாளிக்க வேண்டுமெனில், நமது முதலீடுகள் அதை (பணவீக்கத்தை) தாண்டி வருவாய் அளிப்பதாக இருக்க வேண்டும். அதற்க்கு பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சிறப்பான தேர்வாக உள்ளது.


நமது பணம் பாதுகாப்பாக இருக்குமா ?

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அனைத்தும் செபியின் (SEBI - Securities and Exchange Board of India) கட்டுப்பாட்டில் இயங்க கூடியவை ஆகும். மேலும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் கடுமையான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது. 

எனவே இங்கு முதலீடு செய்ய கூடிய நமது பணம் பாதுகாப்பாகவே முதலீடு செய்யப்படும். ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தையின் போக்கிற்கு ஏற்ப லாபமாகவோ அல்லது நஷ்டமாகவோ மாறலாம். 

இதை தவிர்ப்பதற்கு, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மேற்கொள்வதற்கு முன்பு உங்களது முதலீட்டு ஆலோசகரிடம் இது பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு, முதலீடுகளை மேற்கொள்ளவும்.

-- SNP 











Saturday, June 30, 2012

MUTUAL FUND INVESTMENT


இப்பொழுது மியுச்சுவல் பண்ட் முதலீடு மிக எளிமையாக ...




முதலீடு பற்றிய விவரங்களுக்கு,

இ மெயில் - snp.personalfinance@gmail.com    

மொபைல் -  9789 44 5 777

Friday, June 29, 2012

முதலீட்டு வகைகள்

வணக்கம் நண்பர்களே,

இதற்க்கு முந்தைய பதிவுகளை படிக்காமல் இருந்திருந்தால், அவற்றை படிக்க.

கேள்வி - பதில்
சேமிப்பு vs முதலீடு

இந்த இரண்டு பதிவுகளின் மூலம் நாம் அறிந்து கொண்டதன் சுருக்கம்:

1. சேமிப்பு என்பதும் முதலீடு என்பதும் ஒன்றல்ல.

2. சேமிப்பு என்பது நமது முதலீட்டிற்க்கான முதல் படி. 



இந்த பதிவில் முதலீட்டு வகைகள் பற்றி பார்ப்போம்.

முதலீடு: 

"நமது செலவை குறைப்பதின் மூலம் அல்லது (அனாவசிய) செலவு செய்யாமல் இருப்பதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தி (சேமிப்பு) அதனை நல்ல வருமானம் தரக்கூடிய திட்டங்களில்முதலீடுசெய்யும் பொழுது நமது பணம் ஒரு நல்ல ருமானத்தைநமக்கு அளிக்கும்"


முதலீடு செய்வதற்கு முன்பாக நமது முதலீடு எவ்வகையானது என்பதை முடிவு செய்து அதற்க்கு ஏற்றது போன்ற திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும். 

முதலீட்டு வகைகளை பொதுவாக இரு பிரிவுகளில் பிரிக்கலாம்.


1. குறைந்த கால முதலீடு (Short Term Investment)
2. நீண்ட கால முதலீடு (Long Term Investment)

குறைந்த கால முதலீடு (Short Term Investment)


குறுகிய காலத்திற்குள் பணம் தேவைப்படும்பொழுது, முதலீடு குறுகிய கால முதலீடாக அமையுமாறு திட்டமிடுதல் வேண்டும்.


குறுகிய கால முதலீட்டின் முக்கிய நோக்கம், நமது முதலீட்டு தொகை எந்த வித பாதிப்பும் இல்லாமல் நமக்கு கிடைக்க வேண்டும்.

சில உதாரணங்கள் :






















குறுகிய கால முதலீட்டிற்கு ஏற்றவை:

1. வங்கி முதலீடு
2. தபால் நிலைய முதலீடு 
3. மியுட்சுவல் பண்ட் (கடன் சார்ந்தவை)







நீண்ட கால முதலீடு (Short Term Investment)


நீண்ட நாள் தேவையை மனதில் கொண்டு செய்ய கூடிய முதலீடுகள் இவ்வகையை சேர்ந்தவை.

உங்களுடைய பணம் சிறந்த முதலீடாக மாறி உங்களது எதிர்கால தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே இம்முதலீடுகளை நோக்கம்.

முக்கியமாக உங்களது முதலீடு பண வீக்கத்தை தாண்டி செயல்பட கூடியதாக இருக்க வேண்டும்.

சில உதாரணங்கள் :























நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்றவை:

1. மியுட்சுவல் பண்ட் (பங்கு சந்தை சார்ந்தவை)
2. ரியல் எஸ்டேட் (நிலம் / வீடு)
3. PPF
4. தங்கம் (கோல்ட்)


இங்கே முக்கியமாக குறிப்பிட வேண்டியது என்னவென்றால், மியுட்சுவல் பண்ட் முதலீடு என்பது இரண்டு வகைகளுக்கும் பொதுவானதாக உள்ளது.


இனி வரும் பதிவுகளில் மியுட்சுவல் பண்ட் பற்றி மிக விரிவாக பார்க்கலாம்.


மியுட்சுவல் பண்ட் என்றால் என்ன ? 
ஏன் இவற்றில் நாம் முதலீடு செய்ய வேண்டும் ? 
மியுட்சுவல் பண்ட் வகைகள் என்ன ? 
சிறந்த மியுட்சுவல் பண்ட் திட்டங்கள் எவை ? 


இதை போன்ற அனைத்து தகவல்களையும் இனி விரிவாக பார்க்கலாம்.


- SNP 








Friday, April 27, 2012

சேமிப்பு vs முதலீடு

வணக்கம் நண்பர்களே,

நமது முந்தைய பதிவில் (கேள்வி - பதில்) குறிப்பிட்டு இருந்ததை போல நல்ல முதலீடுகளைப் பற்றி பார்ப்பதற்கு முன்னால், சேமிப்பிற்கும் முதலீட்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

சேமிப்பு:







நண்பர் ஒருவர் தனது மனைவிக்கு மொபைல் வாங்கி கொள்ள சொல்லி ரூபாய் பத்தாயிரம் கொடுக்கிறார். நண்பரது மனைவி அவ்வளவு விலையில் வாங்க வேண்டுமா என்று யோசித்து ரூபாய் நான்காயிரம் விலையுள்ள மொபைல் வாங்கி கொள்கிறார்.

இதன் மூலம் நண்பரது மனைவி சேமித்தது ரூபாய் ஆறாயிரம்.

"நமது செலவை குறைப்பதின் மூலம் அல்லது (அனாவசிய) செலவு செய்யாமல் இருப்பதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தினால் அதனை சேமிப்பு என கூறலாம்"

முதலீடு: 









சேமிப்பு என்பது முதலீட்டின் முதல் படி என எடுத்துக் கொள்ளலாம்.

சேமித்த பணத்தை முதலீடு செய்யாமல் இருந்ததால், அந்த பணமானது அதன் மதிப்பை இழந்து விடும். 

அதாவது பணவீக்கத்தை விட அதிக வருமானம் தரக்கூடிய முதலீட்டு திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யாமல் இருந்திருந்தால் உங்கள் பணத்தின் மதிப்பு குறைவாகவே இருக்கும். 

(இந்தியாவின் பணவீக்கம் - மார்ச் மாதத்தின் படி - 6.89%)

"சேமித்த பணத்தை முறையாக நல்ல வருமானம் தரக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்" 


சேமிப்பு என்பதும் முதலீடு என்பதும் ஒன்றல்ல.  ஆனால் முதலீடு என்பது சேமிப்பில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. 

பெரும்பான்மையான பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுக்கு சேமிப்பு பற்றி சொல்லி கொடுக்கின்றனர். ஆனால் முதலீடு பற்றி சொல்லி கொடுப்பது மிக குறைவாகவே உள்ளது. 


அடுத்து வரும் பதிவில் முதலீட்டு திட்ட வகைகள் பற்றி பார்ப்போம்.

Note: Kindly post your valuable comments. (உங்களின் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யவும்)

தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள்  இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம் 


Mail to: snp.personalfinance@gmail.com

- SNP 









Monday, March 19, 2012

கேள்வி - பதில்


சமீபத்தில்  தினமலர் இதழுடன் (18-03-2012) வெளிவந்த வாரமலர் புத்தகத்தில் இந்த கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 

ஒரு கேள்வி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால், அக்கேள்வி புத்தகத்தின் முதல் பக்கத்தில் (அட்டையில்) இடம் பெரும் என்பதை நம் நினைத்து பார்க்க வேண்டும்.

இதோ அந்த கேள்வி
















Source: Dinamalar 

கேள்விக்கான பதில் என்னவாக இருக்கும் ?
....
...
..
.

இதோ கேள்விக்கான பதில் ....

















Source: Dinamalar 

ஆமாம். இதுதான் உண்மை. 

நம்மில் பலருக்கும் நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை எப்படி சேர்த்து வைப்பது என்று தெரிவதில்லை. அப்படியே சேர்த்து வைத்தாலும், எங்கு எப்படி சேமித்தால் அந்த பணம் நல்லதொரு முதலீடாக மாறி நமக்கு பயன்தரும் என்று தெரிவதில்லை.

இந்த BLOG மூலம் என்னால் இயன்றவரை உங்களுக்கு இதைப் பற்றி அவ்வப்போது கூற முயல்கிறேன். 

Note: Kindly post your valuable comments. (உங்களின் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யவும்)

தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள்  இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம் 

- SNPPFS 
THANKS TO DINAMALAR (நன்றி தினமலர்)